உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவ தும், அதனால் பலர் பயனடைந்து வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும் பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம் 10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு, பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14 கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது, பழையபடியே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர், பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது. உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும் என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப் பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய, நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன. விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும், அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதுதான் நிலைமை.
உடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர். இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும். அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல் இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப் பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில் உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். சிறுநீரகத் திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமாகிறது.
இதனை வலியுறுத்த இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள் இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால், ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது. ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில், இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில் தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில் முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு!
உடல்தானம் குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத் தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
Tuesday, December 15, 2009
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
தெலுங்கு, ஆனால்...
தெலங்கானா எனப்படும் ஹைதராபாத் மாநிலத்தை, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஆந்திர மாநிலத்துடன் 1956-ம் ஆண்டிலேயே சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். அதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. மொழிவாரி மாநிலம் என்ற அளவுகோல் வைக்கப்பட்ட பிறகு, ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமையுமானால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று நேரு கருதினார். மேலும் மறுசீரமைப்பு செய்யப்படும் மற்ற மொழிவாரி மாநிலங்களிலும் இத்தகைய கருத்துகள் எழக்கூடும் என்றும் கருதினார்.
நேருவின் எண்ண ஓட்டத்தில் தவறு காண முடியாது. ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமைந்திருந்தால், தமிழ்நாட்டில்கூட கொங்குநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, நாஞ்சில் நாடு என்று தனித்தனியாகக் கோரிக்கை எழுந்திருக்கும். இதேபோன்ற மனநிலை கர்நாடகத்திலும் கேரளத்திலும் ஏன் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
ஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவின் ஆதங்கம் கருத்தில் கொள்ளப்படும் என்று நேரு அளித்த வாக்குறுதியை மறந்து, தெலங்கானா என்றழைக்கப்படும் 10 மாவட்டங்களின் (ஹைதராபாத், அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நலகொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வரங்கல்) வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்பதால்தான் இன்னமும் தெலங்கானா பிரச்னை உயிர்ப்புடன் மீண்டும் எழுகிறது.
தெலங்கானாவில்தான் படிப்பறிவில்லாதவர் அதிகம், இங்குதான் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம். இங்குதான் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகளை விற்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகள் ஓடினாலும் வறட்சிதான் மிச்சம். தெலங்கானாவில்தான் ஆந்திர மாநிலத்தின் ஒரே ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரி உள்ளது. ரயில்வே மண்டல அலுவலகம் உள்ளது. ராமகுண்டத்திலிருந்துதான் ஏவுகணை ஏவப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும்பாலோர் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவைதான் இப்போது தெலங்கானா போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருக்கிறது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள், தற்போது தெலங்கானா பகுதியைவிட மிகச்சிறிய பரப்பளவு கொண்டவை. அவற்றைத் தனிமாநிலமாக அறிவித்துள்ளபோது, சுமார் 3.5 கோடி மக்கள்தொகை கொண்டிருக்கும் தெலங்கானாவை ஏன் தனி மாநிலமாக அறிவிக்கக்கூடாது என்பது தற்போது முன்வைக்கப்படும் வாதம்.
சரி, நேருவின் எண்ணத்துக்கு மாறாக, ஒரே மொழிபேசும் மாநிலத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் சந்தேகம்தான். தெலங்கானாவில் எந்தவித சுயமான நிதிஆதாரத்துக்கும் வழியில்லை. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டால், அது முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். நக்ஸல் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய் தெலங்கானா பகுதிக்கு ஒதுக்கப்பட்டாலும் இவை முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறபோது, தனி மாநிலமாக மாறினால் மட்டும் நிலைமை சரியாகிவிடுமா என்பது சந்தேகம்தான்.
தெலங்கானா கோரிக்கை மக்கள்பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று சொல்வதைவிட இது சில அரசியல் தலைவர்களின் சுயலாபத்துக்காக எழுப்பப்படுகிறது என்பதால்தான் இந்தப் புதிய மாநிலம் உருவாவதை நாம் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியிருக்கிறது.
தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் கலவரங்களும் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக என்பதைக் காட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இக்கட்சியின் கெüரவத்தை நிலைநாட்டவும் தனது தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும்தான். கடந்த தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இக்கட்சி. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 26 எம்எல்ஏ, 5 எம்.பி.க்களைப் பெற்று மத்திய மாநில அரசில் பங்கு வகிக்கவும் செய்த டி.ஆர். எஸ். கட்சிக்கு இது படுதோல்வி. இதை ஈடுசெய்யவே தற்போது நடந்த போராட்டங்கள்.
மேலும், தற்போது ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்குத் தலைவலி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே கருத்தில் செயல்பட்டுவரும் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது என்பதும் இப்போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
தெலங்கானா தனிமாநிலம் ஆவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ராஜிநாமா செய்யத் தயாராகி இருக்கிறார்கள்.
இன்னொரு சிக்கல் இப்போதே ஆந்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் என்றால் ராயலசீமா எந்த விதத்தில் குறைவு? கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு? அவற்றையும் தனி மாநிலமாக்குங்கள் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சலுகைகள், நலத்திட்டங்கள், நிதி, தொழில்வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும், கண்காணிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் தவறுகள் நிகழும்போது, இப்படியான போராட்டங்களையும் நியாயப்படுத்தும் நிலை உருவாகிவிடுகிறது.
மக்களாட்சியில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனால், தெலங்கானா போன்ற கோரிக்கைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது!
நேருவின் எண்ண ஓட்டத்தில் தவறு காண முடியாது. ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமைந்திருந்தால், தமிழ்நாட்டில்கூட கொங்குநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, நாஞ்சில் நாடு என்று தனித்தனியாகக் கோரிக்கை எழுந்திருக்கும். இதேபோன்ற மனநிலை கர்நாடகத்திலும் கேரளத்திலும் ஏன் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
ஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவின் ஆதங்கம் கருத்தில் கொள்ளப்படும் என்று நேரு அளித்த வாக்குறுதியை மறந்து, தெலங்கானா என்றழைக்கப்படும் 10 மாவட்டங்களின் (ஹைதராபாத், அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நலகொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வரங்கல்) வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்பதால்தான் இன்னமும் தெலங்கானா பிரச்னை உயிர்ப்புடன் மீண்டும் எழுகிறது.
தெலங்கானாவில்தான் படிப்பறிவில்லாதவர் அதிகம், இங்குதான் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம். இங்குதான் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகளை விற்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகள் ஓடினாலும் வறட்சிதான் மிச்சம். தெலங்கானாவில்தான் ஆந்திர மாநிலத்தின் ஒரே ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரி உள்ளது. ரயில்வே மண்டல அலுவலகம் உள்ளது. ராமகுண்டத்திலிருந்துதான் ஏவுகணை ஏவப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும்பாலோர் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவைதான் இப்போது தெலங்கானா போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருக்கிறது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள், தற்போது தெலங்கானா பகுதியைவிட மிகச்சிறிய பரப்பளவு கொண்டவை. அவற்றைத் தனிமாநிலமாக அறிவித்துள்ளபோது, சுமார் 3.5 கோடி மக்கள்தொகை கொண்டிருக்கும் தெலங்கானாவை ஏன் தனி மாநிலமாக அறிவிக்கக்கூடாது என்பது தற்போது முன்வைக்கப்படும் வாதம்.
சரி, நேருவின் எண்ணத்துக்கு மாறாக, ஒரே மொழிபேசும் மாநிலத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் சந்தேகம்தான். தெலங்கானாவில் எந்தவித சுயமான நிதிஆதாரத்துக்கும் வழியில்லை. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டால், அது முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். நக்ஸல் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய் தெலங்கானா பகுதிக்கு ஒதுக்கப்பட்டாலும் இவை முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறபோது, தனி மாநிலமாக மாறினால் மட்டும் நிலைமை சரியாகிவிடுமா என்பது சந்தேகம்தான்.
தெலங்கானா கோரிக்கை மக்கள்பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று சொல்வதைவிட இது சில அரசியல் தலைவர்களின் சுயலாபத்துக்காக எழுப்பப்படுகிறது என்பதால்தான் இந்தப் புதிய மாநிலம் உருவாவதை நாம் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியிருக்கிறது.
தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் கலவரங்களும் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக என்பதைக் காட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இக்கட்சியின் கெüரவத்தை நிலைநாட்டவும் தனது தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும்தான். கடந்த தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இக்கட்சி. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 26 எம்எல்ஏ, 5 எம்.பி.க்களைப் பெற்று மத்திய மாநில அரசில் பங்கு வகிக்கவும் செய்த டி.ஆர். எஸ். கட்சிக்கு இது படுதோல்வி. இதை ஈடுசெய்யவே தற்போது நடந்த போராட்டங்கள்.
மேலும், தற்போது ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்குத் தலைவலி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே கருத்தில் செயல்பட்டுவரும் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது என்பதும் இப்போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
தெலங்கானா தனிமாநிலம் ஆவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ராஜிநாமா செய்யத் தயாராகி இருக்கிறார்கள்.
இன்னொரு சிக்கல் இப்போதே ஆந்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் என்றால் ராயலசீமா எந்த விதத்தில் குறைவு? கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு? அவற்றையும் தனி மாநிலமாக்குங்கள் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சலுகைகள், நலத்திட்டங்கள், நிதி, தொழில்வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும், கண்காணிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் தவறுகள் நிகழும்போது, இப்படியான போராட்டங்களையும் நியாயப்படுத்தும் நிலை உருவாகிவிடுகிறது.
மக்களாட்சியில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனால், தெலங்கானா போன்ற கோரிக்கைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது!
Tuesday, December 1, 2009
"அணு' அளவும் இல்லை
அணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.
சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.
இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?
அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.
பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.
ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.
இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!
*** Thanks Dinamani ****
சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.
இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?
அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.
பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.
ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.
இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!
*** Thanks Dinamani ****
Subscribe to:
Posts (Atom)