tag:blogger.com,1999:blog-76634284337228012672024-03-13T04:37:32.896-07:00கண்ணிமைஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரேRajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-61287162228453561072012-02-10T17:49:00.001-08:002012-02-10T17:49:47.115-08:00இறைவா, எங்கே போகிறோம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<h3> Saturday, February 11, 2012 </h3><div class="entry"> <table><tbody>
<tr> <td> <div id="summary8209179726612446154" style="margin-top: 10px;"> <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-heI1tME5oQQ/TzW_2esTYcI/AAAAAAAAB0A/85KNnDeWN8Y/s1600/images+(11).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: #0b5394;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-heI1tME5oQQ/TzW_2esTYcI/AAAAAAAAB0A/85KNnDeWN8Y/s1600/images+(11).jpg" /></span></a></div><a href="" name="more"></a><br />
<br />
<div class="story_left_1_news" style="line-height: 18px; margin: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"><span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"><span style="color: #0b5394;">வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.<br />
அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.<br />
இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.<br />
இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.<br />
அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!<br />
இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.<br />
கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.<br />
கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?<br />
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.<br />
திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.<br />
பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.<br />
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.<br />
திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?</span></span></div></div></div></td></tr>
</tbody></table></div></div><div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-67730267459899613812011-05-05T19:26:00.000-07:002011-05-05T19:28:02.122-07:00தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p12.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img align="right" alt="" border="0" height="400" hspace="2" src="http://new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p12.jpg" vspace="2" width="286" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;"></div><div style="text-align: center;"><span style="color: red;"><strong>கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்! </strong></span></div>அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அந்த அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. நிச்சயம் இது நல்ல செய்திதான், அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல... உலகுக்கே!<br />
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்டு, ஒசாமாவை அழித்தே விட்டது அமெரிக்கா. ஆனால், ஒசாமா எப்படி உருவானார்?<br />
'ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடன்’- இதுதான் ஒசாமாவின் முழுப் பெயர். பிறந்த இடம் ரியாத், சவுதி அரேபியா. பிறந்த நாள் மார்ச் 10, 1957. ஒசாமாவின் தந்தை முஹம்மது பின் அவாத் பின்லேடன் பெரும் பணக்காரர். சவுதி அரச குடும்பத் தோடு மிக நெருக்கமான உறவுவைத்து இருந்த முஹம்மது பின் அவாத் பின்லேடனுக்கு, ஏராளமான மனைவிகள். அவர்களில் 10-வது மனைவியான ஹமிதாவுக்கு ஒசாமா பிறந்தார். தந்தையின் 54 பிள்ளைகளில் 17-வது பிள்ளை ஒசாமா!<br />
செல்வச் செழிப்பான சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ஒசாமாவின் இளம் பருவம், உறவுகள் சார்ந்து சந்தோஷமாக இல்லை. காரணம், ஒசாமா பிறந்த சில காலத்திலேயே அவருடைய பெற்றோர் பிரிந்தனர். பிறகு, அல் அத்தாஸ் என்பவரை மணந்தார் ஹமீதா. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளோடு, மாற்றாந் தகப்பன் சூழலிலேயே வளர்ந்தார் ஒசாமா. சின்ன வயதிலேயே மதத்தின் மீது அவருக்குப் பெரிய ஈடுபாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.<br />
கல்லூரி நாட்களில் ஒசாமாவுக்குப் பொருளாதாரம் மீது பெரிய நாட்டம் இருந்தது. பொருளாதாரமும் மேலாண்மைக் கல்வியும் அவர் கற்றதாகச் சொல்லப் படுவது உண்டு. பின்னாட்களில், ஒசாமா சிவில் இன்ஜினீயரிங்கும், மக்கள் நிர்வாகமும் படித்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. ஒசாமாவின் 17-வது வயதில் அவருக்கு முதல் திருமணம் நடந்தது. முதல் மனைவியின் பெயர் நஜ்வா. பிறகு, ஒசாமா மேலும் நால்வரை மணந்தார். மொத்தம் அவருக்கு 25 பிள்ளைகள் இருப்பதாகச் சொல் கிறார்கள்!<br />
ஒசாமாவை ஆயுத அரசியலை நோக்கியும் மத அடிப்படைவாத அமைப்பியலை நோக்கியும் தள்ளியது, ஆஃப்கன் மீதான சோவியத் ஒன்றியத்தின் தாக்குதல். அப்துல்லா அஸாமுடன் சேர்ந்து 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் செயல்படத் தொடங்கினார் ஒசாமா. தொடக்கத்தில், பெஷாவரில் இருந்தவாறு ஆஃப்கன் போருக்கான நிதியைக் குவித்துத் தருவதிலும் ஆயுதங்களை வாங்கித் தருவதிலும் ஒசாமா ஈடுபட்டு இருந்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக இதே அமெரிக்கா அந்த நாட்களில் ஒசாமாவுக்குப் பணம் கொடுத்தது. ஒரு கட்டத்தில் 'மஹ்தப் அல் கதாமத்’ அமைப்பில் இருந்து பிரிந்தார். இன்னும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அவர் உருவாக் கியதுதான் 'அல்-கொய்தா’!<br />
தொடக்கத்தில் அல்-கொய்தாவின்நோக்கம், சுதந்திர ஆஃப்கனை உருவாக்குவதாகவே இருந்தது. 1989-ல் சோவியத் படைகள் ஆஃப்கனில் இருந்து வெளியேறியதும், ஒசாமா அரேபியா திரும்பினார். சிறிது காலம் அல் -கொய்தா அடங்கி இருந்தது. குவைத் படை எடுப்பைக் காரணம் காட்டி, இராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், அரபு உலகம் அமெரிக்கா வசமாகிவிடும் என்பதை ஒசாமாவுக்கு உணர்த்தியது. 'எதுவாக இருந்தாலும், நமக்குள் பேசிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் அல்லாதோருக்கு உதவ வேண்டாம்!’ என்று அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஒசாமா. இதற்காக சவுதி மன்னரையும் சந்தித்தார். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நேரடியாக இறங்கியது அல்-கொய்தா.<br />
1990-களிலேயே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான 'எஃப்.பி.ஐ.’ அல்-கொய்தாவைக் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டது. சதித் திட்டங்கள் பின்னணியில் பலர் பிடிபட்டனர். 1993-ல் உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின் அமெரிக்கா அல்-கொய்தாவைப் பின்தொடர ஆரம்பித்தது.<br />
ஒரு கட்டத்தில் சவுதிக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கினார் ஒசாமா. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாக 1992-ல் ஏமனுக்குச் சென்றார். அங்கே இருந்து அரபு நாடுகளில் செயல்படும் எல்லாத் தீவிரவாத அமைப்புகளுடனும் அவர் கை கோக்க, தொடர்ந்து சூடான், எகிப்து, லிபியா எனப் பல்வேறு நாடுகளாலும் தேடப்படும் நபராக 1996-ல் ஆஃப்கனின் ஜலாலாபாத்துக்கு வந்தார் ஒசாமா. முல்லா உமருடன் கை கோத்தார்.<br />
தாலிபன்கள் ஆண்ட-முல்லா உமர் காலத்திய ஆஃப்கன்தான், ஒசாமாவின் கனவு தேசம். மக்களைக் கற்காலத்துக்குத் திரும்ப அழைத்துச் சென்ற அந்த ஆஃப்கன்தான், 'உலகின் ஒரே இஸ்லாமிய நாடாகச் செயல்படு கிறது!’ என்று ஒசாமா சொன்னார்.<br />
மெரிக்காவில் 2001 அல்- கொய்தா நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் தேடப்படும் நபர் ஆனார் ஒசாமா. உலகெங்கும் 'ஜிஹாதி’ என்ற சொல் பிரபலமானது. கடவு ளின் பெயரால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்; எவ்வளவு பயங்கரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றலாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு எல்லாம் முன்னோடி ஒசாமாதான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்தது அமெரிக்கா. 2007-ல் இந்தத் தொகை 50 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. 30 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஒசாமாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தேடல் வேட்டை, பாகிஸ்தானின் அப்போடாபாத்தில் நடந்த இறுதித் தாக்குதலில் வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது!<br />
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதுதான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’! ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன, ஈழப் போராட்டம் உட்பட! <br />
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''<br />
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.<br />
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''<br />
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.<br />
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
</div><div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-77245441295822852112011-04-20T20:19:00.000-07:002011-04-20T20:19:15.929-07:00செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் :ஆர்.நடராஜன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.<br />
<br />
உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், "போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?<br />
<br />
நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா?<br />
<br />
கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய "டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா?<br />
<br />
ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட? <br />
<br />
<br />
<b>ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்</b></div><div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-36232486054987543882011-03-19T08:27:00.001-07:002011-03-19T08:27:31.725-07:00விலைபோகும் ஜனநாயகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1">கடந்த இரு நாள்களாக இந்தியா முழுவதிலும் பேசப்படுகின்ற பேச்சாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த விவகாரமாகவும் மாறியிருக்கிறது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற பிற கட்சி உறுப்பினர்களுக்குக் கோடிகோடியாய் பணத்தைக் கொட்டித் தீர்த்த விவகாரம்.</span><br />
<br />
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அந்த நாளின்போதும்கூட, தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்கள் என்று பாஜக உறுப்பினர்கள் சிலர் பணக் கட்டுகளை அவையில் எடுத்துக் காட்டி, அந்த செய்தி நாடு முழுவதும் ஒளிபரப்பானபோது, மத்திய அரசு அதை மறுத்தது. <br />
<br />
ஆனால் தற்போது விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்த உண்மைகள் அப்பட்டமாக வெளியாகியுள்ளன. காங்கிரஸின் முக்கிய பிரமுகரான சதீஷ் சர்மா என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த 4 நாள்களுக்கு முன்பாக, எம்பி-க்களுக்குக் கொடுப்பதற்காக ரூ.50 கோடி முதல் 60 கோடி வரை பணத்தை வைத்திருப்பதைத் தமக்குக் காட்டியதாக அமெரிக்கத் தூதரக அலுவலர் ஒருவர் அமெரிக்க அரசுக்கு ஜூலை 17-ம் தேதி ரகசிய மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். இதனை விக்கிலீக் அம்பலப்படுத்தியுள்ளது. இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.<br />
<br />
இதற்கு தார்மீகப் பொறுப்பேற்றுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டபோது, இதில் பிரதமர் அளித்துள்ள விளக்கம் - இதுவரை அளித்துள்ள தன்னிலை விளக்கங்களையெல்லாம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. ""இந்திய மக்களால் விவாதிக்கப்பட்டு, அலசப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பழைய விஷயங்களுக்கு எதிர்க்கட்சியினர் அங்கீகாரம் அளித்து, உயிர் கொடுக்க நினைக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார் பிரதமர்.<br />
<br />
அதெப்படி அவரால் இந்த விவகாரம் மக்களால் தள்ளுபடி செய்யப்பட்டவை என்று தீர்மானிக்க முடிகிறது. இதை தீர்மானிக்க அவருக்கு உதவியாக இருக்கிறது ஒரு புள்ளிவிவரம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியுறச் செய்த காங்கிரஸýக்கு அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் 141 இடத்திலிருந்து 206 இடங்கள் அதிகமாக அளித்து, அரசின் மீது மக்கள் மன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறதாம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பாஜகவுக்கு 138 இடங்களிலிருந்து 116 இடமாகக் குறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 59 இடங்களிலிருந்து 39 ஆகக் குறைந்துவிட்டது என்கிறார்.<br />
<br />
அதாவது தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் தோற்றுவிட்டால், மக்கள் இவர்களது செயலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று அர்த்தமா? அடுத்தத் தேர்தலில் 206 இடங்களுக்கும் கூடுதலாக சில இடங்கள் பெற்றுவிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லிவிடலாமா? எதற்கு எதை அளவுகோலாக வைப்பது?<br />
<br />
இந்தத் தகவல் அமெரிக்க நாட்டுக்கும் அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்துக்கும் இடையிலான ரகசிய கடிதப் போக்குவரத்து. இதை யாரும் உறுதிப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில் பிரதமர் இத்தகைய வாதத்தை முன்வைக்கின்றார். இதை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நன்கு அறியும். அதனால்தான், இப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றே சொல்கிறார்கள்.<br />
<br />
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்றுப் போகுமெனில், அதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மற்றொரு தேர்தலை சந்திக்க வேண்டும்; அதில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுற்று எதிர்க்கட்சியாக இருக்கலாம் என்பதைத் தவிர, பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் பதவியின் மோகம், அதிகார போதை எப்படியும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்று, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும்போது, அந்த பேராசையின் முன்னால் எல்லா நீதி, நியாயங்களும் உடைந்து போகின்றனவே...<br />
<br />
நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் காங்கிரஸýக்கு முன்அனுபவம் உண்டு. இது ஒன்றும் புதியதல்ல.<br />
<br />
அமெரிக்கத் தூதரகம் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது பெரும்பான்மை ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அமெரிக்கா எந்த அளவுக்கு இந்த விவகாரத்தை மிகவும் நுட்பமாகக் கண்காணித்திருக்கும் என்பதை எவரும் உணர முடியும். அணுசக்தி ஒப்பந்தம் கைகூடாமல் போனால் அதனால் இழப்பும் கௌரவக் குறைச்சலும் அமெரிக்க அரசுக்குத்தான்.<br />
<br />
யார் கண்டது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கக் காங்கிரஸýக்கு உதவியது அமெரிக்க உளவுத்துறையாகக்கூட இருந்திருக்கக்கூடும். இல்லையென்றால், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த அமர்சிங்கின் உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவைக் காங்கிரஸ் எப்படிப் பெற்றது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு காங்கிரஸ் பதில் அளித்ததாகத் தெரியவில்லையே ஏன்?<br />
<br />
மத்திய அரசோ அல்லது காங்கிரஸ் நிர்வாகிகளோ இத்தகைய சட்டவிரோதச் செயலைச் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப்படியானால், அமெரிக்க அரசு தனது நலனுக்காக இந்தியாவில் ஆட்சி கவிழாமல் காப்பாற்ற பணத்தை வாரி இறைத்தது என்கிறாரா? இதற்கு வேறு என்னதான் பொருள்?</div><div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-71546354056251627462010-09-08T17:43:00.000-07:002010-09-08T17:43:40.938-07:00தண்ணீர் அகதிகள்...............!இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.<br />
<br />
<br />
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.<br />
<br />
2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.<br />
<br />
இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.<br />
<br />
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.<br />
<br />
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.<br />
<br />
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.<br />
<br />
இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.<br />
<br />
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.<br />
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.<br />
<br />
மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-18001474375996806372010-08-15T02:35:00.000-07:002010-08-15T02:35:59.656-07:00அச்சுறுத்தும் "சூப்பர்-பக்'குகள்!எந்தவொரு வீரிய மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர்-பக்' எனப்படும் பாக்டீரியா இந்திய மருத்துவமனைகளிலிருந்து உலகுக்கு பரவியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழில் வெளியான தகவல், இப்போது பரபரப்பாக செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது. <br />
<br />
<br />
இந்த ஆய்விதழ் குறிப்பிடும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிருமி அல்லது ஒருவகை மரபீனி இ-காலி, கே-நிமோனியா ஆகிய இரு பாக்டீரியாக்களுடன் கலந்து, மனிதர்கள் உடலுக்குள் சென்று எல்லாவிதமான நோய்களையும் ஏற்படுத்தும் என்பதாலும், எந்தவிதமான தீவிர ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் இந்த "சூப்பர்-பக்' கட்டுப்படாது என்பதும்தான் அந்த ஆய்வின் முடிவு. <br />
<br />
இந்தக் கிருமியின் பெயரில் நியு டெல்லி என்ற அடையாளம் இருக்கிறதே தவிர, இந்தக் கிருமி, தில்லி மருத்துவமனைகளிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலிருந்தோ வெளியுலகுக்குச் சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த "சூப்பர்-பக்' தாங்கிய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து அறிய வந்துள்ளன.<br />
<br />
இந்த "சூப்பர்-பக்' கிருமி ஆய்வில் ஈடுபட்ட இரு ஆய்வு மாணவர்களில் ஒருவர் தமிழக ஆராய்ச்சியாளர் கே. கார்த்திகேயன். வெள்ளக்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியல் ஆய்வு மாணவர். இங்கிலாந்து ஆய்விதழின் கருத்தை இவரே மறுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டும்தான் இந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.<br />
<br />
ஏதோ "சூப்பர் பக்' மட்டும்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி என்று கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை என்று நிறைய கிருமிகள் உள்ளன. நுண்ணுயிரித் தொழில்நுட்பம் விரிந்து நுட்பமாகச் செல்வதால், புதுப்புது ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கிருமிகள் பற்றி கண்டறிகிறார்கள். அதற்காக பீதி கிளப்ப வேண்டியதோ அல்லது இந்தியாவின் மீது பழிசொல்வதோ தேவையில்லாத வேலைகள். குறிப்பாக ஆராய்ச்சி இதழ்களுக்குத் தேவையில்லாத வேலை.<br />
<br />
இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்துதான் பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் இறக்குமதியாகின. இதற்காக எந்த நாட்டையும் இந்தியா பழிசொல்லவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, இந்தியாவுக்கு வருகை தந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் வாட்டி வதைக்கவில்லை.<br />
மேலும், இத்தகைய கிருமிகள் மனிதர் மூலம்தான் பரவ முடியும் என்பதில்லை என்று மறுக்கும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது மனிதர்கள் விமானம் மூலம் சில மணி நேரத்திற்குள் உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்ல முடிகிறது. ஆகவே, அந்த நாட்டின் கிருமித்தொற்று இந்த நாட்டுக்குள் புகுந்ததாகச் சொல்ல முடிகிறது. ஆனால் இத்தகைய பயண வசதிகள் இல்லாத காலத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் காலரா போன்ற நோய்கள் பரவலாக ஒரே நேரத்தில் ஏற்பட்டு, உலகம் முழுவதும் மக்கள் இறந்தார்கள் என்பதைக் குறிப்பிடும் சில ஆய்வாளர்கள், வான் வழியாகவும், இடம்பெயரும் பறவைகள் மூலமும் கிருமிகள் பரவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். <br />
<br />
ஆகவே இந்தியாவின் மீது மட்டும், குறி வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசிவிட்டுப் போவதற்குக் காரணம், இந்தியாவில் ஏற்பட்டுவரும் மருத்துவ வளர்ச்சிதான். குறிப்பாக, மருத்துவப் பயணமாக இந்தியா வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது. <br />
<br />
இந்தியாவில் மருத்துவ வசதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுக்கு இணையாக உள்ளது. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் குறைவு. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால், 30,000 அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 6,000 அமெரிக்க டாலர் (3 லட்சம் ரூபாய்) செலவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முடியும். ஆகவே இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.<br />
<br />
இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது புதிது புதிதாகத் தொடங்கப்படும் பல மருத்துவமனைகள் இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்காகவே, ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்துக்கு மருத்துவமனையை நிர்வகிக்கின்றன. நோயாளிகளைத் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர, பிரசாரம் செய்ய ஏஜன்டுகளையும்கூட பல நாடுகளிலும் பயன்படுத்துகின்றன. <br />
<br />
இந்தியாவில், வெளிநாட்டினரின் மருத்துவப் பயணத்தால் கிடைக்கும் வருவாய் 5,000 கோடி ரூபாயாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 10,000 கோடி ரூபாய்) உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வளர்ந்த நாடுகளின் மருத்துவக்கூடங்களின் லாபம் குறைந்து விடுகிறது. அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் குறைகிறது. ஆகவே, இவை வெளிநாட்டினரை அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகள். <br />
<br />
இந்த அவதூறுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அன்னிய சக்திகள். இன்னொருபுறம் நமது வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற முயலும் இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும். உலகம் "சூப்பர்-பக்' பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். இந்தியாவை அச்சுறுத்தும் "சூப்பர் பக்'குகள் ஒன்றா, இரண்டா... நாமல்லவா பயப்பட வேண்டியிருக்கிறது!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-79089857908754491102010-04-05T20:05:00.000-07:002010-04-05T20:05:39.594-07:00எப்படியும் வாழ்வதா...?வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, திருமணத்துக்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் தெரிவித்தபோது கோடிக்கணக்கான நெஞ்சங்கள் பதறின; இதை ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பலரின் குமுறலிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் அறிய முடிகிறது. ராமசேனை என்ற அமைப்பின் தலைவரான பிரமோத் முத்தாலிக்கின் கருத்துகளையும் செயல்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் இந்தப் பிரச்னையில் அவர் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம் அனைவராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.<br />
<br />
<br />
ஒரு வீட்டில் விபசாரம் நடக்கிறது என்ற தகவல் கிடைத்து போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்யச் சென்றால், ""வயது வந்த நாங்கள் ஒரே இடத்தில் தனித்து இருப்பதும், உடல் உறவு கொள்வதும் சட்டப்படி செல்லத்தக்கதே'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையே அவர்கள் திருப்பிச் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியுமா? <br />
<br />
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதே அதிரடி பாணியில், ""இங்கே வந்தீர்களே எங்கள் செய்கையால் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, உங்கள் வீட்டில் யாராவது இதே போல நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?'' என்று கேட்டால் போலீஸ்காரர்களால் என்ன பதிலைக் கூற முடியும்?<br />
<br />
அரசு வழக்கறிஞரைப் பார்த்து அந்த நீதிபதிகள் கேட்ட கேள்விகளை, அதே வழக்கறிஞர் மாற்றிக் கேட்டிருந்தால் நீதிபதிகளின் நிலை என்ன ஆகியிருக்கும்? உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் பார்க்கும்போது, இப்படி திருமணத்துக்கு முன்னால் இன்னொருவருடன் சேர்ந்திருந்தால் பரவாயில்லை என்று திருமணம் செய்வீர்களா, உடலுறவு கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டிருந்தால்?<br />
<br />
திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிகைகளில் ""சிறப்புச் செய்திகள்'' வருவது உண்டு. இது ஏதோ சமுதாய அக்கறையில் வெளியிடப்படுவதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தக் கட்டுரைகளே, அப்படி முறைதவறி நடக்க அஞ்சும் இளைய தலைமுறையை மனதளவில் தயார்படுத்த, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பணம் கொடுத்து எழுத வைக்கும் வியாபார உத்தி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். <br />
<br />
கருத்தடை மாத்திரைகள், ஆண் உறை, பெண் உறை போன்ற சாதனங்கள் இவற்றின் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்து இதற்காகவே செயல்படுகின்றன என்பது அப்பாவிகளான நம் நாட்டு மக்கள் அறியாத அப்பட்டமான உண்மை. தங்களுடைய ""தொழிலுக்கு'' உற்ற களத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யத்தான் இந்தச் செய்திகளும் கட்டுரைகளும். சிவப்பழகி, கண் அழகி, கால் அழகி என்ற அழகிப் போட்டிகள் எல்லாம்கூட இந்த வியாபார உத்தியின் பிரிக்க முடியாத அங்கமே. <br />
<br />
ஆங்கில வார இதழ்களிலும் மாநில மொழி வாரப் பத்திரிகைகளிலும் முறை வைத்துக் கொண்டு இப்படி அந்தரங்க விஷயங்களை ஏதோ அறிவியல்பூர்வமாக ஆய்ந்து எழுதுவதாக எழுத்து விபசாரம் செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை மட்டுமல்ல, பாரதத் திருநாட்டின் வருங்காலத்தையும், தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வந்த உயரிய பண்புகளையும் தகர்த்தெறியத் தலைப்படுகிறார்கள்.<br />
<br />
கருத்தடை மாத்திரைகள், மோகத்தை அதிகப்படுத்தும் வீரிய சக்தி மாத்திரைகள், (லேகியங்கள்), உள்ளாடைகள், மாதவிடாய்க்கால சானிடரி நாப்கின்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகின்றன. வரவோ அவற்றைப் போல பல மடங்கு. <br />
<br />
சொல்ல நா கூசுகிறது என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இரவு நேர சிறப்புக் காட்சிகளும் இந்தத் தொழிலுக்கு வளம் சேர்க்கத்தான் என்பதே உண்மை. மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ஏளனமாகக் குறிப்பிடப்படும் வேசைத்தனமே இன்று காட்சி ஊடகங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் நீதிபதிகளின் கருத்து நெஞ்சங்களில் தீயை வைத்துவிட்டது என்றால் மிகையில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தரப்பட்ட ஒரு தீர்ப்பும் இதே போல சிந்தனையாளர்களின் கோபத்துக்கு ஆளானது. ஆனால் அந்தத் தீர்ப்பு இன்றுவரை திருத்தப்படவே இல்லை என்பதே உண்மை.<br />
<br />
அதாவது தில்லியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கரும்புகையைக் கக்கும் சில தொழில் நிறுவனங்கள் மேட்டுக்குடிகளின் இல்லங்கள் இருந்த பகுதியில் அமைந்திருந்தன. அதாவது தொழிற்சாலைகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டிக்கொண்டு மேட்டுக்குடிகள்தான் பின்னாளில் குடியேறினார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய செல்வாக்கு காரணமாக, காற்றில் மாசு அதிகரித்துவிட்டதால் அந்த ஆலைகளை வேறு இடத்துக்குக் கொண்டு போய் நிறுவ வேண்டும் என்று வழக்குத் தொடுக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.<br />
<br />
அந்தத் தீர்ப்பு வந்தபோது சிந்தனையாளர்கள் எழுப்பிய கேள்விகள் மூன்று. இந்த ஆலைகளிலிருந்து இந்த அளவுக்கு நச்சுப்புகை வந்தால் நகரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது மக்களைப் பாதிக்குமே, நச்சுத்தன்மையைக் குறைக்க வேண்டும் அல்லது உற்பத்தியையே கைவிட வேண்டும் என்று ஏன் உத்தரவிடவில்லை? தில்லி மாநகரின் மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றச் சொல்லி உத்தரவிடுகிறீர்களே அங்கு வசிக்கும் ஏழைகளின் உயிர் என்ன விலை மலிவானதா?<br />
<br />
ஆலையால் பாதிக்கப்படும் மக்கள் ஒரு பக்கம் கிடக்கட்டும், இங்கேயே மூன்று ஷிப்டுகளிலும் வேலை பார்க்கின்றனரே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய உடல் நலம் என்ன ஆகும், அவர்களைக் காப்பாற்ற ஏதாவது உத்தரவில் கூறியிருக்கிறீர்களா என்று. இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.<br />
<br />
கற்பாம், மானமாம்... என்று ஏளனம் செய்யும் நவநாகரிக யுகத்தில், சேர்ந்து வாழ்தல் தவறல்ல என்று கருத்துக் கூறியிருக்கிறது நீதித்துறை. நீதியாம், நியாயமாம்... என்று மனம் நொந்து முணுமுணுப்பதல்லாமல் நமக்கு வேறு வழியேது...? பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்டோபஸ் வியாபாரப்பிடி மேலும் மேலும் இறுகுவதன் இன்னொரு அடையாளம்தான் இந்தத் தீர்ப்பு என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை... எப்படியும் வாழலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் முதல் பலி நீதித்துறையாகத்தான் இருக்கும் என்பதை நமது நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-87966335550342882002010-01-27T18:02:00.000-08:002010-01-27T18:02:29.410-08:00கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.<br />
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. <br />
<br />
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. <br />
<br />
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும். <br />
<br />
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். <br />
<br />
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. <br />
<br />
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும். <br />
<br />
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை. <br />
<br />
NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?<br />
NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.<br />
<br />
<a href="http://software.nhm.in/products/writer">http://software.nhm.in/products/writer</a><br />
<br />
<br />
எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம். <br />
<br />
<a href="http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html">http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html</a><div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-2447887217681407812010-01-25T20:00:00.000-08:002010-01-25T20:00:44.125-08:00போலி மருந்துகளும்,போதை மருந்துகளும்!கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.<br />
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.<br />
<br />
1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.<br />
<br />
போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.<br />
<br />
சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!<br />
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.<br />
இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.<br />
ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.<br />
இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.<br />
<br />
இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?<br />
மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-73527176071600301382009-12-15T19:20:00.000-08:002009-12-15T19:20:30.404-08:00உறுப்பு தானம்உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவ தும், அதனால் பலர் பயனடைந்து வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும் பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. <br />
<br />
<br />
தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம் 10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு, பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14 கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.<br />
<br />
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது, பழையபடியே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.<br />
<br />
உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர், பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது. உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும் என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப் பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய, நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன. விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும், அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதுதான் நிலைமை.<br />
<br />
உடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர். இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த வேண்டும். <br />
<br />
தமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும். அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல் இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப் பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில் உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். சிறுநீரகத் திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமாகிறது. <br />
<br />
இதனை வலியுறுத்த இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள் இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால், ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது. ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில், இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில் தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.<br />
<br />
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில் முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு!<br />
<br />
உடல்தானம் குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத் தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-62972532361407748382009-12-15T19:11:00.001-08:002009-12-15T19:11:54.969-08:00தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.<br />
<br />
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.<br />
<br />
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.<br />
<br />
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.<br />
<br />
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.<br />
<br />
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.<br />
<br />
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.<br />
<br />
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்! <br />
<br />
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.<br />
<br />
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?<br />
<br />
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-54530408991152379222009-12-15T19:08:00.000-08:002009-12-15T19:08:18.337-08:00தெலுங்கு, ஆனால்...தெலங்கானா எனப்படும் ஹைதராபாத் மாநிலத்தை, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஆந்திர மாநிலத்துடன் 1956-ம் ஆண்டிலேயே சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். அதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது. மொழிவாரி மாநிலம் என்ற அளவுகோல் வைக்கப்பட்ட பிறகு, ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமையுமானால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று நேரு கருதினார். மேலும் மறுசீரமைப்பு செய்யப்படும் மற்ற மொழிவாரி மாநிலங்களிலும் இத்தகைய கருத்துகள் எழக்கூடும் என்றும் கருதினார்.<br />
<br />
நேருவின் எண்ண ஓட்டத்தில் தவறு காண முடியாது. ஒரே மொழி பேசும் இரு மாநிலங்கள் அமைந்திருந்தால், தமிழ்நாட்டில்கூட கொங்குநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு, நாஞ்சில் நாடு என்று தனித்தனியாகக் கோரிக்கை எழுந்திருக்கும். இதேபோன்ற மனநிலை கர்நாடகத்திலும் கேரளத்திலும் ஏன் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.<br />
<br />
ஆந்திர மாநிலத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தெலங்கானாவின் ஆதங்கம் கருத்தில் கொள்ளப்படும் என்று நேரு அளித்த வாக்குறுதியை மறந்து, தெலங்கானா என்றழைக்கப்படும் 10 மாவட்டங்களின் (ஹைதராபாத், அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நலகொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வரங்கல்) வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்பதால்தான் இன்னமும் தெலங்கானா பிரச்னை உயிர்ப்புடன் மீண்டும் எழுகிறது. <br />
<br />
தெலங்கானாவில்தான் படிப்பறிவில்லாதவர் அதிகம், இங்குதான் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம். இங்குதான் வறுமை தாண்டவமாடுகிறது. குழந்தைகளை விற்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகள் ஓடினாலும் வறட்சிதான் மிச்சம். தெலங்கானாவில்தான் ஆந்திர மாநிலத்தின் ஒரே ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரி உள்ளது. ரயில்வே மண்டல அலுவலகம் உள்ளது. ராமகுண்டத்திலிருந்துதான் ஏவுகணை ஏவப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும்பாலோர் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவைதான் இப்போது தெலங்கானா போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருக்கிறது.<br />
<br />
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள், தற்போது தெலங்கானா பகுதியைவிட மிகச்சிறிய பரப்பளவு கொண்டவை. அவற்றைத் தனிமாநிலமாக அறிவித்துள்ளபோது, சுமார் 3.5 கோடி மக்கள்தொகை கொண்டிருக்கும் தெலங்கானாவை ஏன் தனி மாநிலமாக அறிவிக்கக்கூடாது என்பது தற்போது முன்வைக்கப்படும் வாதம். <br />
<br />
சரி, நேருவின் எண்ணத்துக்கு மாறாக, ஒரே மொழிபேசும் மாநிலத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் சந்தேகம்தான். தெலங்கானாவில் எந்தவித சுயமான நிதிஆதாரத்துக்கும் வழியில்லை. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டால், அது முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க முடியும். நக்ஸல் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் சில ஆயிரம் கோடி ரூபாய் தெலங்கானா பகுதிக்கு ஒதுக்கப்பட்டாலும் இவை முறையாகப் போய்ச் சேரவில்லை என்கிறபோது, தனி மாநிலமாக மாறினால் மட்டும் நிலைமை சரியாகிவிடுமா என்பது சந்தேகம்தான். <br />
<br />
தெலங்கானா கோரிக்கை மக்கள்பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று சொல்வதைவிட இது சில அரசியல் தலைவர்களின் சுயலாபத்துக்காக எழுப்பப்படுகிறது என்பதால்தான் இந்தப் புதிய மாநிலம் உருவாவதை நாம் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டியிருக்கிறது. <br />
<br />
தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் கலவரங்களும் தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக என்பதைக் காட்டிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த இக்கட்சியின் கெüரவத்தை நிலைநாட்டவும் தனது தலைமையை தக்கவைத்துக் கொள்ளவும்தான். கடந்த தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு, 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இக்கட்சி. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 26 எம்எல்ஏ, 5 எம்.பி.க்களைப் பெற்று மத்திய மாநில அரசில் பங்கு வகிக்கவும் செய்த டி.ஆர். எஸ். கட்சிக்கு இது படுதோல்வி. இதை ஈடுசெய்யவே தற்போது நடந்த போராட்டங்கள்.<br />
மேலும், தற்போது ஆந்திர முதல்வர் ரோசய்யாவுக்குத் தலைவலி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே கருத்தில் செயல்பட்டுவரும் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கிறது என்பதும் இப்போராட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.<br />
தெலங்கானா தனிமாநிலம் ஆவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ராஜிநாமா செய்யத் தயாராகி இருக்கிறார்கள்.<br />
<br />
இன்னொரு சிக்கல் இப்போதே ஆந்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது. தெலங்கானா தனி மாநிலம் என்றால் ராயலசீமா எந்த விதத்தில் குறைவு? கடலோர ஆந்திரம் எந்தவிதத்தில் குறைவு? அவற்றையும் தனி மாநிலமாக்குங்கள் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான சலுகைகள், நலத்திட்டங்கள், நிதி, தொழில்வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும், கண்காணிக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதில் தவறுகள் நிகழும்போது, இப்படியான போராட்டங்களையும் நியாயப்படுத்தும் நிலை உருவாகிவிடுகிறது.<br />
<br />
மக்களாட்சியில், ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனால், தெலங்கானா போன்ற கோரிக்கைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-44838119761087145482009-12-01T20:17:00.000-08:002009-12-01T20:17:54.105-08:00"அணு' அளவும் இல்லைஅணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.<br />
<br />
<br />
சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.<br />
<br />
இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?<br />
<br />
அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?<br />
<br />
அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்களஎன்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.<br />
<br />
டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.<br />
<br />
இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.<br />
<br />
சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.<br />
<br />
பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.<br />
<br />
சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.<br />
<br />
ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.<br />
<br />
இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புரியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!<br />
<br />
*** Thanks Dinamani ****<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-48916495921625820762009-11-15T21:19:00.000-08:002009-11-15T21:19:34.401-08:00ஆபத்தான அஜினா மோடோ (AJINA MOTO)!( டாக்டர் கங்கா)<br />
<br />
<br />
சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ..<br />
<br />
தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?<br />
<br />
<br />
அதென்ன அஜினமோட்டோ?<br />
<br />
உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.<br />
<br />
மோனோ சோடியம் குளுட்டோமேட்<br />
<br />
இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.<br />
<br />
அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!<br />
<br />
வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது?<br />
<br />
இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.<br />
<br />
MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?<br />
<br />
நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.<br />
<br />
MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது<br />
<br />
இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.<br />
<br />
இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.<br />
<br />
எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!<br />
<br />
மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.<br />
<br />
எம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.<br />
<br />
தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.<br />
<br />
அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.<br />
<br />
இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.<br />
<br />
உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.<br />
<br />
சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.<br />
<br />
தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.<br />
<br />
பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.<br />
<br />
உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.<br />
<br />
அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.<br />
<br />
தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸ'ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.<br />
<br />
ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.<br />
எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது?<br />
<br />
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்<br />
<br />
சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)<br />
<br />
கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.<br />
<br />
சூப் பவுடர்கள்.<br />
<br />
நன்றி: கூடல்.காம்<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-77953809980522140132009-10-07T18:18:00.000-07:002009-10-07T18:18:18.599-07:00மூன்று பெரிய பொய்கள் என்.கணேசன்<br />
<br />
<a href="http://enganeshan.blogspot.com/2009_08_01_archive.html">http://enganeshan.blogspot.com/2009_08_01_archive.html</a><br />
<br />
இன்றைய உலகம் மூன்று பெரிய பொய்களைப் பெரிதும் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் இயங்குகிறது. இக்காலத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் அந்தப் பொய்கள் மீதுள்ள நம்பிக்கை தான் என்று கூட சொல்லலாம். <br />
<br />
அந்த மூன்று பெரிய பொய்கள் -<br />
<br />
1) அதிகமாக இருப்பதே நல்லது.<br />
2) பெரியதாக இருப்பதே நல்லது.<br />
3) வேகமாக இருப்பதே நல்லது.<br />
<br />
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நம்பிக்கைகளில் தவறென்ன இருக்கிறது என்று தோன்றலாம். இவையெல்லாம் உண்மையல்லவா என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் தெளிவாக சிந்தித்து ஆராய்ந்தால் நமக்கு உண்மை விளங்கும்.<br />
<br />
முதல் பொய்யைப் பார்ப்போம். அதிகமாக இருப்பதே நல்லது, அதிகமாகப் பெற்றிருப்பதே வெற்றி என்கிற எண்ணம். முக்கியமாக பணமும், சொத்துகளும், அதிகாரமும் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு வெற்றி என்ற கருத்து இன்றைய காலத்தில் வேரூன்றி வருகிறது. இன்னும் சொல்லப் போனால் வெற்றியின் அளவே இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று கூடச் சொல்லலாம். <br />
<br />
தோன்றுகிற அளவுக்கு அது உண்மை தானா என்று பார்க்க அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த அளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்று தூரத்திலிருந்து பார்க்காமல் அருகே போய்ப் பாருங்கள். இல்லா விட்டால் அவர்களுக்கு மிக அருகே இருப்பவர்களைக் கேளுங்கள். பணம், சொத்து, அதிகாரம் - இந்தப் பட்டியல் நீளுமளவு சந்தோஷம், நிறைவு, நிம்மதி பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுடைய எல்லா வெற்றியும் வெளித் தோற்றத்துடன் நின்று போகிறது என்பது உங்களுக்குப் புரியும்.<br />
<br />
அதிகமாக இருப்பவர்களுக்கு இழப்பதற்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இழந்து விடுவோமோ என்ற பயம் இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது என்று கூட சொல்லலாம். பலர் இருப்பதை அனுபவிக்காமல் ஏதோ ஒரு துஷ்ட சக்தியால் பீடிக்கப் பட்டவர்கள் போல் எந்திரத்தனமாக அதை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு இருக்கிறது என்று அடுத்தவருக்குக் காட்டும் முயற்சியின் அளவுக்கு சேர்த்ததை பயன்படுத்துவதற்கான முயற்சி இருப்பதில்லை. அதிகமாக சேரச் சேர பொறாமை பிடித்தவர்கள் கூட்டமும், அதை அபகரிக்க நினைக்கிறவர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சமயம் பார்த்துக் காத்திருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியும் வர, நிம்மதி காணாமல் போய் விடுகிறது. இப்போது சொல்லுங்கள்- மிக அதிகம் உண்மையிலேயே சிறப்பானது தானா? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்வது உண்மையல்லவா?<br />
<br />
இரண்டாவதாக, பெரியதாக இருப்பதே நல்லது என்ற பொய். பிரபலமாக இருக்க வேண்டும், எல்லோரும் மிகவும் முக்கியத்துவம் தரும் நிலையில் இருக்க வேண்டும், நாலு பேர் பெருமையாகப் பாராட்டும்படி இருக்க வேண்டும், அதுவே சிறந்த வெற்றி, நல்லது என்கிற இந்த நம்பிக்கையும் மேலோட்டமாகப் பார்த்தால் இதிலென்ன குறை என்று கேட்கத் தோன்றும். மிகப் பிரபலமான மனிதர்கள் பெரும்பாலும் சுதந்திரம் என்ற ஒன்றை போகப் போக இழந்து விடுகிறார்கள். மிகப்பிரபலமான நடிகர், நடிகைகளைப் பாருங்கள். எங்கும் அவர்களைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காமிராக்கள் போகிற பக்கமெல்லாம் காத்துக் கொண்டு இருக்கும். ஆரம்பத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போது பெருமைப்படும் அவர்கள் பின்னாளில் மற்றவர்கள் கண்ணில் படாமல் தங்கள் இஷ்டப்படி இருக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கும். <br />
<br />
பெரிய அரசியல்வாதிகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வாய் விட்டுச் சொல்ல முடியாதவர்களாய் பல நேரங்களில் இருப்பார்கள். தெரியாமல் சொல்லி விட்டால் அது பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பினால் நான் அப்படி சொல்லவில்லை என்று ஆரம்பித்து ஏதேதோ பிதற்றி அவஸ்தைப் படுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பின் மறந்து கூட நினைத்தபடி பேசவோ, நடந்து கொள்ளவோ முடியாமல் மற்றவர்கள் நினைக்கிறபடி பேசி, நடந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.<br />
<br />
எத்தனை தான் பணமும், சொத்தும் இருந்தாலும் தங்கள் இஷ்டப்படி செயல்படவோ, பேசவோ முடியாத பிரபலங்கள், பிரபலங்களாக இருப்பதற்கு பெரும்பாலும் சுதந்திரத்தையே விலையாகத் தரவேண்டி வருகிறது.<br />
சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து மனிதன் பெறத்தக்கது தான் என்ன?<br />
<br />
மூன்றாவதாக, வேகமே நல்லது என்கிற பொய். இப்போதைய உலகின் மந்திரச் சொல்லே வேகம் (FAST) தான். எதையும் வேகமாகப் பெற வேண்டும், எங்கும் வேகமாகச் செல்ல வேண்டும், எதுவும் வேகமாக மாற வேண்டும்-அதுவே பெருமைக்குரிய விஷயம் என்ற சிந்தனை தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆம்புலன்ஸ் போவது போல் மிகவும் அவசரத்தில் வண்டியோட்டி பல பேருக்கு பல இடைஞ்சல்கள் செய்து கடைசியில் ஒரு பெட்டிக் கடையின் முன் வண்டியை நிறுத்தி சாவகாசமாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி வேடிக்கை பார்க்கும் சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். சிறிது ஏமாந்தால் சிகரெட்டிற்குப் பதிலாக அந்த இளைஞனே சாம்பலாகப் போயிருக்க எத்தனையோ விபத்து வாய்ப்புகள் இருக்கும் வண்ணம் பறந்து வந்து சாதிப்பது சிகரெட் பிடிப்பது தானா? <br />
<br />
எதையும் வேகமாகப் பெற வேண்டும் என்ற ஆவல் பலரை எத்தனையோ பேரை நியாயமற்ற குறுக்கு வழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர் அப்படிக் கிடைக்காத போது தவித்துப் போகிறார்கள். இதனால் வேகமாகக் கிடைப்பதென்னவோ இரத்த அழுத்தமும், நோய்களும் தான். வண்டிகளில் அதிவேகமாகப் போகிறவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஆஸ்பத்திரியில் சேர்வதும் உண்டு. மற்றவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவதும் உண்டு. வாழ்க்கையில் வேகமாகப் போகிறவர்கள் வாழ்க்கையின் முடிவில் தான் இந்த வேகத் தூண்டுதலில் வாழ மறந்து விட்டோம் என்று உணர்கிறார்கள். <br />
<br />
எதுவும் நம்முடைய உண்மையான இயல்புக்கும், உண்மையான தேவைக்கும் ஏற்ற அளவு இருப்பது தான் நமக்கு நல்லது. பொய்களை அஸ்திவாரமாகக் கொண்ட எந்த வாழ்க்கை முறையும் என்றுமே நிரந்தர நிம்மதியைக் கொடுப்பதில்லை. எனவே இந்தப் பொய்களை உலகம் எவ்வளவு தான் விளம்பரப்படுத்தினாலும் ஏமாந்து போகாதீர்கள்.<br />
<br />
- என்.கணேசன்<br />
http://enganeshan.blogspot.com/2009_08_01_archive.html<br />
<br />
(இவரின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது)<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-52260767580167578512009-10-06T19:47:00.000-07:002009-10-06T19:47:31.115-07:00குவாத்ரோச்சி.... சோனியா காந்தியின் உறவினர்,1989-மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்த ரூ. 64 கோடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், கடந்த மக்களவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் பேச விரும்பாத அளவுக்கு மிகவும் சிறிய, ரொம்பவும் பழைய ஊழலாக மாறிப்போய், இந்தியக் குடிமக்களும் மறந்துவிட்ட நிலையில், எங்க அப்பன் குதிரில் இல்லை என்ற கதையாக, தானே இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு.<br />
<br />
<br />
மற்றவர்கள் எல்லாரும் போஃபர்ஸ் ஊழலை மறந்துவிட்டாலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் மட்டும் மறக்க முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.<br />
<br />
ஒட்டாவியோ குவாத்ரோச்சி, அர்ஜென்டினா நாட்டில் கைது செய்யப்பட்டபோது, அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் தோற்றுப்போய், அர்ஜென்டினாவில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், "குவாத்ரோச்சி தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் இந்திய அரசு சமர்ப்பிக்கவில்லை' என்று அம்பலப்படுத்தியபோதே, இந்த வழக்கின் கதி என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துபோன ஒன்று.<br />
<br />
இந்த வழக்கு வெறும் "கயிற்றரவு' என்று புத்திக்கு எட்டிவிட்ட நிலையிலும்கூட, அதில் இன்னமும் உயிர் இருப்பதைப்போலவும், அந்த உயிரசைவில் அது நல்லபாம்பு அல்ல, வெறும் தண்ணிப்பாம்பு என்று உலகை நம்பச் செய்யவும் ஆட்சியாளர்கள் நடத்தும் இந்தப் போலி நாடகம், அவர்கள் செய்த ஊழலைவிடவும் வெட்கக்கேடாக இருக்கிறது.<br />
<br />
குவாத்ரோச்சி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக மத்திய அரசு குறிப்பிடும் காரணங்கள் வலுவற்றவை. அவரை இன்னொரு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை என்ற காரணத்துக்காக ஒரு வழக்கைத் திரும்பப் பெறுவது என்ற முன்னுதாரணம் ஏற்படுமானால், தொடர் வெடிகுண்டு வழக்கில் மறைந்துவாழும் தாவூத் இப்ராகீம் மீதான வழக்கையும் திரும்பப் பெறுவார்களா?<br />
<br />
இந்த வழக்கை நடத்துவதற்கான சாதகமான அம்சம் ஏதுமில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததாலேயே வழக்கைத் திரும்பப் பெறுவது என்றால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் கொலைவெறித் தாக்குதல் செய்த தீவிரவாதிகளில் ஒருவரான கசாபு-வுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு நிச்சயமாகத் தரப்போவதில்லை என்கிற காரணத்தால், அவர் மீதான வழக்கை நடத்தாமல் விட்டுவிடுவது சரியாக இருக்க முடியுமா?<br />
<br />
அல்லது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் சொல்வதைப் போல, இந்த வழக்கில் தேவையில்லாமல் மக்கள் பணம் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது என்பது சரியான வாதம் என்றால், மத்திய அரசு நிறைய வழக்குகளை நடத்தாமல் இருந்தாலே கருவூலப் பணம் கோடிகோடியாய் மிச்சமாகுமே!<br />
<br />
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார்களை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதைக் காட்டிலும், நிரூபிக்கக் கூடாது என்பதற்காகவே செயல்பட்டதற்கான ஆதாரம்தான் அதிகம்.<br />
<br />
குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் உறவினர். ஆகவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்திய அரசில் செல்வாக்குடன் வலம் வந்தவர்.<br />
<br />
ஆயுத பேரத்தில் கணிசமான தொகை இவர் மூலம் கைமாறியது என்பது இவர்மீதான குற்றச்சாட்டு. குவாத்ரோச்சிக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் லண்டனில் உள்ள பிஎஸ்ஐ ஏஜி வங்கியில் தனித்தனியாக இரண்டு சேமிப்புக் கணக்குகள் இருப்பதும், அவற்றில் முறையே 3 மில்லியன் யூரோ, 1 மில்லியன் யூரோ டாலர்கள் இருப்பில் உள்ளதை இன்டர்போல் அமைப்பு வெளியிட்டது. இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.<br />
<br />
ஆனால், 2006-ல், காரணம் ஏதுமின்றி இந்த முடக்கத்தை நீக்கியது இந்திய அரசு. தேடப்படும் நபர் என்பதான "ரெட் கார்னர் நோட்டீûஸ'யும்கூட இன்டர்போல் விலக்கிக் கொள்ளும்படிச் செய்ததும் மத்திய புலனாய்வுத் துறைதான்.<br />
<br />
இந்திய அரசே இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு, தற்போது இதையே இயலாக் காரணங்களாகக் காட்டி, வழக்கைத் திரும்பப்பெற மனு செய்கிறது. போஃபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் இருப்பவர் குவாத்ரோச்சி மட்டுமே. அவரைக் காப்பாற்ற, வழக்கைக் கொன்று புதைக்கிறார்கள்.<br />
<br />
இந்திய அரசுதான் வழக்கைத் தொடுத்தது. அதே இந்திய அரசு இப்போது வழக்கை திரும்பப் பெறுகிறது.<br />
<br />
எந்தத் தவறும் செய்யாத சீதையை உலகத்தின் திருப்திக்காக தீயில் இறங்கச் செய்த அதே ராமன்தான், தவறு செய்ததால் கல்லாய்ப்போன அகலிகை மீது தன் கால்பட பாவத்தைப் போக்குறான். சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களுக்குக் குற்றம் செய்தவர் மீதுதான் எப்போதும் பரிவு. அவர்களை மன்னிப்பதில்தான் எப்போதுமே அதிக ஆர்வம், அதிக அக்கறை!<br />
<br />
நியாயங்களோ புதிரானது, புரியாமல் போனது...<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-28148928879595086652009-10-06T19:25:00.000-07:002009-10-06T19:25:09.651-07:00முடிவற்ற கலப்படம்!இரு தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மளிகைக் கடைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தேயிலைத் தூள் பொட்டலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் 50 சதவீத தேயிலைத் தூள் கலப்படமானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல தேயிலையுடன் சாயம் தோய்க்கப்பட்ட மரத்தூள் கலந்து விற்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தூள்களில் தேநீர் வாசனை தரும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உடல்நலனுக்குத் தீங்கானவை என்பதில் சந்தேகம் இல்லை.<br />
<br />
<br />
இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது புதிதல்ல. கடந்த மார்ச் மாதம் உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்கூடத்தில் தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி, 16,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூளைப் பறிமுதல் செய்தனர். செப்டம்பர் மாதம் சென்னை மாநகரில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில் 300 கிலோ கிராம் கலப்படத் தேயிலை கண்டறியப்பட்டது. தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது, 3,000 கிலோகிராம் கலப்படத் தேயிலைத் தூள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு தேநீர்க் கடை இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டில் தேயிலையின் பயன்பாடு ஆண்டுக்கு 802 மில்லியன் கிலோகிராம். அதாவது ஒவ்வொரு தனிநபரும் 750 கிராம் தேயிலையைப் பயன்படுத்துகிறார்.<br />
<br />
ஆனாலும், கலப்படத் தேயிலைத் தூள் நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க முடியாததன் முதல் காரணம், தேயிலையின் அபரிமிதமான விலை. தேயிலைச் சந்தையில் கலப்படம் ஏற்பட முதல் காரணம் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள்தான். ஏனென்றால் இவர்கள்தான் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதனால், தேநீர்க் கடைகள் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்குக் கட்டுபடியான விலையில் தேயிலைத் தூளைத் தேடும்போது, அவர்களுக்குக் கிடைப்பது பெரும்பாலும் கலப்படத் தேயிலைத் தூளாகத்தான் இருக்கிறது.<br />
<br />
பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, சிறு தேயிலைத் தோட்டங்களை வைத்திருப்போர் தங்கள் தேயிலையைத் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்த காலகட்டத்தில், பெரும் நிறுவனங்களைக் காட்டிலும் விலை மலிவாக நல்ல தரமான தேயிலை கிடைத்தது என்பது உண்மையே.<br />
<br />
ஆனால், பெரிய நிறுவனங்களின் விலைக்கும் சிறு தேயிலைத் தோட்டங்களின் விலைக்கும் இடையே காணப்பட்ட பெரிய இடைவெளி, இடைத்தரகர்களை சிறுதேயிலைத் தோட்டங்களிடம் ஒட்டுமொத்த கொள்முதல் வணிகத்தில் ஈடுபட வைத்தது. நாளடைவில் இந்த இடைத்தரகர்கள்தான் பெரும் நிறுவனங்களின் வணிகப்பெயர்களில் தேயிலைப் பொட்டலங்களைச் சந்தைக்கு அனுப்புவதும், கலப்படத் தேயிலையை தேநீர்க் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்களுமாக மாறினர். இவர்கள் யார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும், "எல்லாரும் அறிந்த காரணங்களால்' இந்தக் கலப்படம் முடிவில்லாமல் தொடர்கிறது.<br />
<br />
தேயிலைத் தூள் விலை அதிகமாக இருக்கும்வரை சந்தையில் கலப்படத் தேயிலைத் தூள் நுழைவதைத் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே. தேயிலை விலையை முறைப்படுத்தி, குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் கலப்படம் தானாகவே ஒழியும். ஆனால் அதற்கு இந்தப் பெரிய நிறுவனங்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் போனால் போகட்டும் என்று மனமிரங்கினாலும்கூட நடக்காது. ஏனென்றால், இப்போது சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்டங்களை நேரடியாகவும் பினாமி பெயர்களிலும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பவர்களில் பலரும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள்தான். இவர்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.<br />
<br />
தேயிலை விற்பனையில் இந்த நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதியிலும் அடையும் லாபம் பல நூறு மடங்கு. இதில் முன்னிலை வகிப்பவை பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களுடன் டாடா தேயிலை போன்ற உள்நாட்டு ஜாம்பவான்கள் சிலரும் போட்டியில் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். பன்னாடு, அல்லது உள்நாடு எந்த நிறுவனமாக இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம்-இந்தியத் தேயிலையை உலகச் சந்தையில் விற்றுப் பெரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே! முந்தைய நிதியாண்டில் இந்தியத் தேயிலை ரூ. 1,889 கோடிக்கு ஏற்றுமதியானது. இந்த ஆண்டு 20 சதவீதம் மேலும் கூடியுள்ளது. அதாவது ரூ. 2,275 கோடிக்கு ஏற்றுமதி.<br />
<br />
இவ்வளவு வருவாயைப் பெறும் தேயிலைத் தொழில்துறையின் வருத்தமெல்லாம், உலகச் சந்தையில் தங்கள் பங்கு மிகக் குறைவாக இருக்கிறதே என்பதுதான். உள்நாட்டில் இப்படியான அதிக விலை நிர்ணயிப்பதால் கலப்படத் தேயிலை மிகுந்துபோய், மக்கள் நோய்க்கு ஆளாகிறார்களே என்று கவலைப்பட யாருமில்லை. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இவர்களோடு "தொழிலதிபர்'களாகக் கலந்துவிட்டபோது, இந்தக் கலப்படம் குறித்து மக்களோடு மக்களாகக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-43800441631270706522009-09-30T09:15:00.000-07:002009-09-30T09:15:17.861-07:00உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்டொரண்டோ: தமிழ் ஈழ நிலத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தும் இந்த வேளையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கோவை உலகத் தமிழ் மாநாட்டை முழுமையாகப் புறக்க வேண்டும் என உலக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.<br />
<br />
<br />
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:<br />
<br />
“பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.<br />
<br />
வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர் - அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்று முன்னர் - முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!<br />
<br />
இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக்கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.<br />
<br />
உலகத் தமிழரை ஏமாற்ற…<br />
<br />
தமிழகத்தில், தமிழ் ஆட்சிமொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்பிக்கும் மொழியாக இல்லை. அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை.<br />
<br />
இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.<br />
<br />
‘வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்’ என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்புமொழிப் பெயர்கள்.<br />
<br />
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.<br />
<br />
மரணப் படுக்கையில் தமிழினம்…<br />
<br />
ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.<br />
<br />
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், உருசியா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.<br />
<br />
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி தில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.<br />
<br />
போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக - சட்டதிட்டங்களுக்கு முரணாக - திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
‘விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்’ என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!<br />
<br />
இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் ‘மை டெலிகிராப்’ நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.<br />
<br />
திறந்த வெளிச் சிறைச்சாலைகளில்…<br />
<br />
திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.<br />
<br />
இந்த வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐநா உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. ‘இந்து’ ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென் தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் இலங்கை அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.<br />
<br />
புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 டன் உணவு, உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.<br />
<br />
குற்றம்சாட்டுகிறோம்…<br />
<br />
எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடார், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத் தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!<br />
<br />
ஐநாவின் மனிதவுரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!<br />
<br />
தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது ‘நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்’ என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!<br />
<br />
முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்!<br />
<br />
“இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்தபடியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!<br />
<br />
இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!<br />
<br />
தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குட்டிக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.<br />
<br />
ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டுவிட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.<br />
<br />
இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!<br />
<br />
மூன்று மணிநேரம் உண்ணாநோன்பு நோற்று ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!<br />
<br />
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!<br />
<br />
இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!<br />
<br />
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?<br />
<br />
வெந்த புண்ணில் வேலைச் சொருகுகிறார்…<br />
<br />
வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். “இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்” என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.<br />
<br />
ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பவுத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?<br />
<br />
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!<br />
<br />
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!”, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-1815942888809358952009-09-29T09:10:00.000-07:002009-09-29T09:10:54.012-07:00வாய்தா என்பதே வேலையாகி விட்டது!கே. வீ. ராமராஜ் <br />
<br />
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் பல லட்சக்கணக்கான வழக்குகளும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.<br />
<br />
நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் பலர் தமது வழக்கு விரைவில் முடிவுக்கு வருவதில்லை என்றும், எப்போது பார்த்தாலும் வழக்கில் நீதிமன்றம் வாய்தா போட்டு விடுகிறது என்றும் சொல்வதை பல இடங்களில் கேட்க முடிகிறது. இதைப்போலவே குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றங்கள் பல குற்றவாளிகளை விடுதலை செய்து விடுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டையும் பல இடங்களில் கேட்க முடிகிறது. பொதுவாக, நீதிமன்றங்களில் வாய்தா என்பதே வேலையாகி விட்டது மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுவதற்கான காரணங்களை அலசி ஆராய வேண்டிய தருணம் இது.<br />
<br />
விரைவாக நீதியைப் பெறுவதற்கான உரிமையும் எளிதில் நீதியை அணுகுவதற்கான உரிமையும் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். இதனையே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன.<br />
<br />
இருப்பினும் விரைவில் வழக்குகளை முடிப்பதற்கும் எளிதில் மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது யார்? அதற்கான திட்டம் என்ன? என்ற கேள்விகள் தொடர்கின்றன. தாவாக்களைத் தீர்ப்பதற்கும் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் முறையான நீதி நிர்வாக அமைப்பு இல்லாவிடில் மக்கள் வன்முறைக்கும் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஜனநாயக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ, விரைவான நீதியும் அதனை அணுக எளிதான தன்மையும் மிக அவசியமாகும்.<br />
<br />
இந்தியாவில் 10.5 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி இருப்பதாகவும், ஆனால் 10 லட்சம் மக்களுக்குக் குறைந்தது 10 நீதிபதிகளாவது இருக்க வேண்டுமென்றும் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.<br />
<br />
ஒரு மாவட்டத்தில் சிவில் வழக்குகளைத் தீர்ப்பதற்கான மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் 5 இருப்பதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிபதியும் மாதத்திற்குக் குறைந்தபட்சம் 20 வழக்குகளில் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழிகாட்டி உள்ள நிலையில், அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வழக்குகள் தீர்க்கப்படும். <br />
<br />
ஆனால் அம் மாவட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 500 வழக்குகள் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் நிலையில் வழக்குகளின் தேக்கம் நீதிமன்றம் தீர்க்கும் வழக்குகளுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் இருக்காது. இதைப்போன்ற நிலையே இந்தியா முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வருகிறது.<br />
<br />
இதனால்தான் புதிதாக ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது.<br />
<br />
இவ்வாறு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதன் மீது வழக்கில் தோல்வியுற்ற தரப்பினர் மேல்முறையீடு செய்வதால் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏற்படுவதற்கு மீண்டும் காலதாமதம் ஏற்படுகிறது.<br />
<br />
உதாரணமாக, ஒரு நடுத்தரக் குடிமகன் தமது வாழ்க்கையில் பல ஆண்டுகள் சேமித்து தமக்கென ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஒரு காலி மனையிடத்தை விலைக்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதற்காக அவர் காலி மனையிடங்களை உருவாக்கி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தை அணுகுகிறார்.<br />
<br />
அவர்கள் அந்த நடுத்தரக் குடிமகன் வசிக்கும் நகரை ஒட்டியே சுமார் 200 காலிமனையிடங்களைக் கொண்ட ஒரு புதிய குடியிருப்பை அரசிடம் அங்கீகாரம் பெற்று உருவாக்கியுள்ளார்கள். இதில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து நடுத்தரக் குடிமகன் காலி மனையிடத்தையும் வாங்கி விடுகிறார். அதன் பின்பு அவர் வீடு கட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வருகிறது.<br />
<br />
அதைப் பார்த்தால் இவருக்கு அழைப்பாணை வந்தது போலவே அந்தக் குடியிருப்புப் பகுதியில் காலி இடங்களை வாங்கிய 200 நபர்களுக்கும் அழைப்பாணை வந்துள்ளதை அவர் அறிகிறார்.<br />
<br />
இப் பிரச்னையின் விவரம் என்னவென்றால், இந்த 200 காலி மனையிடங்களை உருவாக்க நிலத்தை வாங்கும்போது அந்நிலத்தின் விற்பனையாளரின் மகன் மைனராக இருந்துள்ளார். அவரது மகன் தற்போது இது பூர்வீகச் சொத்து என்றும், நிலத்தில் காலி மனையிடங்களை வாங்கியது தவறு என்றும், இச்சொத்தில் தமக்குப் பங்கு உள்ளது என்றும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதே ஆகும்.<br />
<br />
இந்த வழக்கு முடிய சுமார் 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்வதாக வைத்துக் கொண்டால்கூட வழக்கு முடியும் வரை சொந்த வீட்டுக் கனவுடன் வீடு வாங்கிய 200 நடுத்தர மக்கள் தமது கனவுகளைக் கேள்விக்குறியாகத் தங்களது வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. வழக்குகள் விரைவாக முடிக்கப்படாவிட்டால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.<br />
<br />
எனவே, சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டுக்குள்ளாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வழக்கில் மேல்முறையீடுகள் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டால் அதிகபட்சம் 6 மாத காலத்திற்குள் அம்மேல் முறையீட்டில் முடிவு காணப்பட வேண்டும். இல்லாது போனால் பொதுமக்களின் அமைதியும் மகிழ்ச்சியும் கேள்விக்குறியாகிவிடும்.<br />
<br />
வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ஏற்பத் திட்டம் வகுத்து அதிகமான நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு கூடுதலான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் நீதிமன்றங்களில் போதுமான நீதிமன்றப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.<br />
<br />
நீதிமன்றங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். உதாரணமாக, சென்னையில் உள்ள ஒருவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பின் நகல் பெற வேண்டும் என்றால் அவர் நாகர்கோவிலுக்குச் சென்று வழக்கறிஞரை அமர்த்தி மனு தாக்கல் செய்து சில நாள்களுக்குப் பின்பு அதனைப் பெற வேண்டி உள்ளது.<br />
<br />
இணையதளம் வசதிகள் மூலம் நீதிமன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியம், வழங்கப்பட்ட தீர்ப்புரை, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் பதில் மனு உள்ளிட்ட எதனையும் ஒருவர் தாம் வசிக்கும் ஊரிலேயே அங்குள்ள நீதிமன்றத்தை அணுகி குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்குள் பெற்றுவிடும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்.<br />
<br />
நீதிமன்றங்களை அதிகரித்து நீதிமன்றப் பணியாளர்களை அதிகரித்து நவீன மயம் செய்யப்பட்டுவிட்டால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்குகளை இழுத்தடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் மறைந்து போவதோடு விரைவான நீதியை எளிதில் வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை.<br />
<br />
இத்தகைய பணிகளைச் செய்வதற்கு உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் எப்போதும் தயாராகவே இருந்து வருகிறது. ஆனால் இப்பணிகளைச் செய்வதற்குப் போதுமான நிதி ஆதாரம் வேண்டும். புதிய நீதிமன்றங்களை உருவாக்கும்போது அதற்கான கட்டடம் தேவைப்படுகிறது.<br />
<br />
அங்கு நியமனம் செய்யப்படும் நீதிபதிகளுக்கும் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டி உள்ளது. நீதிமன்றங்களை நவீனப்படுத்துவதற்குச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்வது சட்டமன்றங்களும் நாடாளுமன்றமுமே ஆகும். ஆண்டுதோறும் மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை.<br />
<br />
குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவில் முடிக்கப்படுவதில்லை என்பதோடு பல சமயங்களில் நடுத்தெருவில் குற்றம் செய்தவர்கள்கூட விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் உண்டு.<br />
<br />
நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வது காவல் துறையினர். வழக்குகளில் சாட்சிகளை விரைவாக அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் மட்டுமே வழக்குகளை விரைவாக முடித்துவிட முடியும். அதைப்போல சரியாகப் புலன் விசாரணை செய்து உண்மையான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து அவர்களைச் சரியாக சாட்சியம் அளிக்கச் செய்யும் கடமை காவல் துறைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞருக்கும் உண்டு. இவற்றைச் சரிவரச் செய்யாமல் போகும்போது சாட்சியங்களின்றி தண்டனை அளிப்பது என்பது நீதிமன்றங்களால் இயலாது.<br />
<br />
தேசிய சட்டப்பணிகள் ஆணையம் நீதியை எளிதில் பொதுமக்கள் அடைவதற்கான வழிவகைகளை உருவாக்குவதோடு இதில் உள்ள தடைகளை நீக்குவதற்குத் தக்க திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துவது அவசியமாகும்.<br />
<br />
மனித உரிமைகளான விரைவான நீதியும் அதனை எளிதில் அணுகும் தன்மையும் மக்களுக்குக் கிடைக்க சமூகத்தில் அதற்கான நடவடிக்கைகளில் தக்க பங்களிப்பை மனிதர்களாகிய பொதுமக்கள் அனைவரும் செய்ய வேண்டியது சமூகக் கடமையாகும்.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-77943235667654900972009-09-29T09:06:00.000-07:002009-09-29T09:06:54.641-07:00ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!எம் . சடகோபன் (Published in Dinamani)<br />
<br />
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் சிக்கலின்றி ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், கல்வி மிகமிக அவசியம். கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பொருத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.<br />
<br />
கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும். அனைத்துத் துறைகளிலும் மேல்நிலை அடைந்தால்தான் வல்லரசாக முடியும்.<br />
<br />
ஆராய்ச்சிகளுக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி இல்லாதபோது எவ்வாறு வல்லரசாக முடியும்?<br />
<br />
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடிப்பவர்களில் 10 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயிலச் செல்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆரம்பக் கல்வியைக் கூட தட்டுத்தடுமாறி முடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்றளவில் உயர்கல்வி என்பது எட்டாக்கனிதான்.<br />
<br />
மக்கள்தொகை அதிகரிப்பு, நாட்டின் செல்வ வளம் அதிகரிப்பு, இடைநிலைக் கல்வியின் விரிவாக்கம் போன்றவற்றின் காரணமாக உயர்கல்வியின் தேவையும் அதிகரிக்க நேர்ந்தது. தனிமனிதனைப் பொருத்தவரை உயர்கல்வி என்பது அவனது சமூக அந்தஸ்தை உயர்த்தத் தேவைப்படுகிறது. தேசிய நிலையில் பார்த்தால் சமூகத்தை மறுசீரமைக்கவும், நாட்டின் மனித வளத்தைப் பெருக்கவும் உயர்கல்வி விரிவாக்கம் அவசியமாகிறது.<br />
<br />
இன்று கல்விக்கூடங்கள் தனியார்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வி விற்பனைக் கூடங்களாக மாறிவிட்டன. அரசு கல்விக்கூடங்களில் பெரும்பாலானவை ஆள் இல்லா பாலைவனங்களாகக் காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பற்றாக்குறை, பணத்துக்காக நியமனம், விடைத்தாள் திருத்தலில் அலட்சியம், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி, போலிச் சான்றிதழ்கள் என்று கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டே செல்கிறது.<br />
<br />
அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த இந்த மண்ணில் குறிப்பாக வடமாநில கிராமங்களில் ஆரம்பக் கல்வியே எட்டாக்கனியாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, அவர்கள் எவ்வாறு உயர்கல்வியைப் பற்றிச் சிந்திக்க முடியும். பணக்காரக் குடும்பங்களில் உள்ள வடஇந்திய மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குப் பின் உயர்கல்விக்காக தென்இந்தியாவை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தென் இந்தியாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களும் அதிகம் உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.<br />
<br />
அண்மைக்காலங்களில் அகில இந்திய அளவில் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு தென்இந்தியாவில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
முறைகேடாகச் சம்பாதித்த பணத்துக்கு முழுப் பாதுகாப்பான முதலீட்டுச் சந்தையாக இருப்பது பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்தான்.<br />
<br />
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் புதிது புதிதாக பொறியியல் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் துவக்குவதிலிருந்து இதை அறியலாம்.<br />
<br />
இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்களாகி மரியாதையை இழந்து வருகின்றன. மேலும், கல்வியின் தரமும் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது.<br />
சில அரசியல்வாதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் வேந்தராகவும், சிலர் ஏராளமான கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்களாகவும் கோலோச்ச முடிவதற்குக் காரணம் அரசியல் தலையீடுதான்.<br />
<br />
ஒருகாலத்தில் தமிழகப் பொறியியல் மாணவர்கள் அமெரிக்காவில் ஐ.டி. உள்பட பல்வேறு துறைகளில் உயர்பதவிகளை வகித்தனர். அப்போது ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர் வரை உள்ள பதவிகளுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் இருந்ததே முக்கியக் காரணம். ஆனால் இன்று... துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் குறிப்பாக ஆளுங்கட்சியினரின் சிபாரிசு இல்லாமல் நடப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உழைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.<br />
<br />
மேலும், கோடான கோடிப் பணத்தை இறைத்து, தேர்தலில் வெற்றி பெற்று வரும் மக்கள் பிரதிநிதிகள் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக உழைக்க முடியுமா?<br />
<br />
இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இளைஞர்கள்தான் உள்ளனர். அதுவும் கிராமப்பகுதியில்தான் அதிகம் உள்ளனர். அவர்களை அறிவுடையவர்களாக வளர்த்தால்தான் நாட்டின் பொருளாதாரம் செழுமை பெறும்.<br />
<br />
வரும்காலத்தில் ஏழை, பணக்கார நாடு என்ற பாகுபாடு மறைந்து அறிவாளிகள், அறியாமையாளர்கள் நாடு என்ற பாகுபாடுதான் இருக்கும் என்பதை கல்வி முதலீட்டாளர்கள் அறிய வேண்டும். தங்கள் கல்லூரி பற்றி பிரபலப்படுத்தி மூளைச்சலவை செய்வதுடன், மாணவர்களின் பெற்றோர்களை கடனாளிகளாக்கும் இவர்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் சிந்தை கொள்ள வேண்டும்.<br />
<br />
பெரும் பணக்காரர்கள் மட்டுமே உயர்கல்வியை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலைக்குக் கல்வியை அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நிலையில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களால் சாமானியனுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. அரசியல் சதுரங்கத்தால் வீணாய்ப்போகும் கல்வியை மீட்க வேண்டியது அரசின் கடமை. இனியும் காலம் தாழ்த்தாமல், ஏழை எளியவர்களுக்கும் உயர்கல்வி தாராளமாகக் கிடைக்க அரசு முற்போக்குத் திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியமாகும்.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-59564860680120671082009-09-22T03:15:00.000-07:002009-09-22T03:23:49.014-07:00இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம்.இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.<br />
<br />
இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது.<br />
<br />
அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு. <br />
<br />
அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்?<br />
<br />
ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்:<br />
<br />
"இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''.<br />
<br />
இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி.<br />
<br />
இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே!<br />
இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.<br />
<br />
இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-22578568871602710092009-09-19T20:49:00.000-07:002009-09-19T20:49:20.121-07:00மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளைஉலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.<br />
<br />
<br />
கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!<br />
<br />
இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.<br />
<br />
அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.<br />
<br />
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?<br />
<br />
அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-<br />
<br />
வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-<br />
<br />
இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.<br />
<br />
கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...<br />
<br />
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...<br />
<br />
ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-30466490321762655272009-09-16T07:49:00.000-07:002009-09-16T07:49:04.684-07:00குணம்நாடிக் குற்றமும் நாடி...!இல. கணேசன்<br />
ஜஸ்வந்த் சிங்கை புத்தகம் எழுதியதற்காக பாரதிய ஜனதா கட்சி நீக்கிவிட்டது என்பதாகச் சிலர் நீட்டி முழக்கி எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்து வருகிறார்கள். ஜஸ்வந்த் சிங், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஜின்னாவைப் புகழ்ந்தார் என்பதற்காக மட்டுமல்ல; வல்லபாய் படேல் குறித்து தவறாக எழுதிவிட்டார் என்பதற்காகத்தான்.<br />
யார் இந்த வல்லபாய் படேல்?<br />
<br />
ஆங்கிலேயன்தான் இந்த நாட்டை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்திவிட்டான் என்று அறியாமையில் சிலர் பேசித் திரிகிறார்கள். ஆனால் உண்மை என்ன? ஆங்கிலேயன் பாரதத்துக்கு சுதந்திரம் தருவதற்கு முன் அது குறித்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினான்.<br />
<br />
அப்போது பாரத நாடு, ஆங்கிலேயனது நேரடி ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என்றும் மன்னர்கள் ஆட்சிக்கு உள்பட்டு ஆனால், ஆங்கிலேயனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி என்றும் இரு பகுதிகளாக நிர்வாக ரீதியில் செயல்பட்டன.<br />
<br />
தன்னுடைய நேரடி ஆதிக்கத்தில் இருக்கின்ற "பிரிட்டிஷ் இந்தியா' பகுதிக்குச் சுதந்திரம் வழங்குவதாகவும், சமஸ்தானங்களைப் பொருத்தவரை அவை விரும்பினால் இந்திய யூனியனில் இணையலாம் அல்லது அவை விரும்பினால் பாகிஸ்தானோடு இணையலாம் அல்லது அவை விரும்பினால் சுதந்திரமாகவே நீடிக்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியவன்தான் ஆங்கிலேயன்.<br />
<br />
அவனது கற்பனை, தான் போன பிறகு பாரதம் சிதறுண்டு போக வேண்டும் என்பதுதான். ஆனால், இறைவன் அருளால் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் பொறுப்பேற்றுக் கொண்ட காரணத்தால் 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனில் இணைந்தன - மூன்றைத் தவிர. ஒன்று ஜுனாகட், இரண்டு ஹைதராபாத், மூன்று ஜம்மு - காஷ்மீர். இதில் ஜுனாகட்டையும் ஹைதராபாதையும் பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை படேல் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாக அவை பாரதத்துடன் இணைந்தன.<br />
<br />
ஜம்மு - காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் பொறுப்பை ஜவாஹர்லால் நேரு ஏற்றுக் கொண்டார். இன்னும் அது தடுமாற்றமாகவே இருக்கிறது.<br />
<br />
கலாசார ரீதியாக பன்னெடுங்காலமாக பாரதம் ஒரே நாடாக இருந்தாலும்கூட அரசியல் ரீதியாக இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திய பெருமை எவரையேனும் சேருமானால் அது வல்லபாய் படேலைத்தான் சேரும்.<br />
<br />
அதுமட்டுமல்ல, பாரதம் மீது படையெடுத்து சோமநாதபுரம் ஆலயத்தைத் தகர்த்து கொள்ளையடித்துச் சென்ற அந்தக் கறையைப் போக்குவதற்காக சபதம் ஏற்றவர் படேல். அதன்படி மீண்டும் அதே இடத்தில் பிரம்மாண்டமான சோமநாதபுரம் ஆலயத்தை நிர்மாணித்து அதை நிறைவேற்றியும் காட்டினார்.<br />
<br />
இந்த இரண்டு காரணங்களுக்காக, நாட்டின் வரலாறு தெரிந்த தேசபக்தர்கள் வல்லபாய் படேலைப் போற்றுகிறார்கள்.<br />
<br />
எந்தவொரு மனிதனிடமும் நற்குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். ஆனால், அவனது வாழ்க்கையில் எது மிகுதியாக வெளிப்படுகிறதோ அதுவே அவனது அடையாளமாகக் கருதப்படும்.<br />
<br />
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடும் மரபே இந்நாட்டின் மரபு.<br />
<br />
அதன் காரணமாகவே சிலரது பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே மக்களுக்கு அவரிடம் எத்தகைய பண்பு கூடுதலாக இருக்கிறதோ அல்லது இருந்ததோ அதுவே நினைவுக்கு வரும்.<br />
<br />
கர்ணன் என்றால் கொடை நினைவுக்கு வரும். ராமன் என்றால் அறம் நினைவுக்கு வரும். சகுனி என்றால் சூது நினைவுக்கு வரும், மகாத்மா என்றால் அஹிம்சை நினைவுக்கு வரும்.<br />
<br />
இதேபோல வல்லபாய் படேல் என்று சொன்னமாத்திரத்தில் நாட்டை ஒற்றுமைப்படுத்தியவர் என்பதே நினைவுக்கு வரும்.<br />
<br />
ஜின்னா என்று சொன்னமாத்திரத்தில் இந்த நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டவர் என்பதே நினைவுக்கு வரும்.<br />
<br />
ஜஸ்வந்த் சிங், படேல் குறித்து, தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக எந்தவித விசாரணையும் இல்லாமல் அவரை நீக்கலாமா? என்று ஜஸ்வந்த் சிங்கின் திடீர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.<br />
<br />
ஒரு கற்பனைக்காக, ஜஸ்வந்த் சிங் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்குமானால் என்ன ஆகியிருக்கும்?<br />
<br />
புத்தகம் வெளியிட்ட 24 மணிநேரத்துக்குள், "நாமெல்லாம் தெய்வமாகப் போற்றக்கூடிய வல்லபாய் படேல் குறித்து பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒருவர் அவதூறாக எழுதிவிட்டார்' என்று குஜராத் மக்களிடையே காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டிருக்கும். அதோடு மக்களின் உணர்வுகளைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, கலவரத்தை உண்டாக்கி, அதன் காரணமாக சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டிருக்குமானால் அது எத்தகைய விபரீதத்தில் முடிந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.<br />
<br />
ஆனால், படேலை தெய்வமாகப் போற்றுகிற குஜராத் மக்கள், இப்போது மோடியின் நற்செயலுக்காக அவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.<br />
அப்படியானால் மோடியைக் காப்பாற்றவா ஜஸ்வந்த் சிங்கை பலியாக்கினார்கள் என்ற கேள்வி ஏழலாம்.<br />
<br />
பாரதிய ஜனதாவில் எந்த ஒரு முடிவும் எந்த ஒரு தனி நபரும் எடுப்பதில்லை. தலைவராக இருந்தாலும், ஒரு குழு கூடித்தான் எந்த ஒரு விஷயம் குறித்தும் முடிவு செய்கிறது.<br />
<br />
ஜஸ்வந்த் சிங் குறித்து கட்சித் தலைமை இதுவரை பகிரங்கமாக எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம். அநேகமாக சொல்லவும் மாட்டார்கள். கட்சிக்குள் இருந்தவர் குறித்து, அவரை கட்சியைவிட்டு வெளியேற்றிய பிறகு களங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசுவது என்பது மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போன்றது. பாரதிய ஜனதா இதை ஒருபோதும் செய்யாது. செய்ததில்லை.<br />
<br />
ஆனால், இந்த அரசியல் நாகரிகத்தையே பலவீனமாகக் கருதி, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அன்றாடம் வீசிவரும் அக்னி ஏவுகணைகள், இதுநாள் வரை வெறும் வாயை மென்று கொண்டிருந்த பலருக்கு, அவல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.<br />
<br />
ஜஸ்வந்த் சிங் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பார்க்கும்போது, கட்சியில் நான்காம் இடத்தில் இருந்த ஒருவரை கட்சித் தலைமை நீக்கியிருப்பதன் மூலம் ஏதோ நியாயமான ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தொண்டர்கள் உறுதியாக உள்ளார்கள். அதிலும் அந்த நபர் வெளியே வந்தபிறகு பேசும் பேச்சுகளைக் கேட்ட பிறகு, இந்த நபரை இத்தனை நாள் எப்படி வைத்திருந்தார்கள் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.<br />
<br />
பாரத நாட்டின் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அச்சமின்றி வழிபாட்டு உரிமையோடு வாழ்ந்து வருகிறார்கள். பாரத நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை ஒரு இஸ்லாமியனுக்கும் இருக்கிறது; ஒரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிறது.<br />
<br />
பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானிலோ அல்லது வேறுசில அரபு நாடுகளிலோ இத்தகைய உரிமையை எதிர்பார்க்க முடியுமா?<br />
<br />
இந்திய நாட்டு முஸ்லிம், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைவிட அதிக சுதந்திரத்துடன்தான் வாழ்ந்து வருகிறான். சொல்லப்போனால், இந்த தேசத்துப் பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத உரிமைகளெல்லாம் சிறுபான்மை மதத்தவருக்கு உள்ளது என்பதுதான் பிரச்னையே.<br />
<br />
அத்வானி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் நாட்டு மரபுப்படி பாகிஸ்தானின் தந்தையாகக் கருதப்படுகின்ற ஜின்னாவின் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அத்வானியும் சென்றார். அங்கிருந்த பதிவுக் குறிப்பேட்டில், விருந்தினரான அத்வானி, தனது கருத்துகளைப் பதிவு செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டதால் பதிவு செய்தார்.<br />
பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, "நான் உருவாக்குகிற பாகிஸ்தானில் இந்துக்கள் ஆலயங்களுக்குச் செல்லலாம். இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லலாம். சீக்கியர்கள் குருத்வாராக்களுக்குச் செல்லலாம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவதற்கு எவ்விதத் தடையும் இருக்காது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதையே ஜின்னா விரும்பினார் எனத் தெரிகிறது' என்றுதான் பதிவு செய்திருக்கிறார்.<br />
<br />
"ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று அத்வானி கூறினார்' என்று கூறுவதற்கு இதில் எங்கே இடமிருக்கிறது. எனவே அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்தார் என்று கூறுவது உண்மையல்ல. மாறாக, மத வேறுபாடு இல்லாமல் பாகிஸ்தான் இருக்க வேண்டும் என்று ஜின்னாவே சொல்லியிருந்தும் பாகிஸ்தான் மதச்சார்பு உள்ள நாடாக இருக்கிறதே என்று பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கிறார்.<br />
<br />
இதே கருத்தைத்தான் மறுநாள், பாகிஸ்தானில் வேறொரு கூட்டத்திலும் பேசியிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அத்வானி, ஜின்னாவை மதச்சார்பற்றவர் எனப் புகழ்ந்துவிட்டார் என ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிச் செய்தி வெளியிட, உண்மை என்னவென்று தெரியாமல் பலர் கண்டனங்கள் தெரிவிக்க அதன்பிறகு நடந்த சம்பவங்களை நாடே அறியும்.<br />
<br />
ஏனைய அரசியல் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா வேறுபட்டு, நல்ல தன்மை உள்ளவர்கள் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் இருப்பதை நடுநிலையாளர்களேகூட ஒப்புக்கொள்வார்கள். இதற்குக் காரணமே ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடித்தளம்தான்.<br />
<br />
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எப்படியோ, தி.மு.க.வுக்கு ஈ.வெ.ரா. எப்படியோ அதுபோலத்தான் பாரதிய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழிகாட்டுதல், பாரதிய ஜனதாவுக்கு எப்போதும் பெருமை தரும்; உயர்வையும் தரும்.<br />
<br />
சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பாரதிய ஜனதா குறித்து திட்டமிட்ட ரீதியில் ஏனைய அரசியல் கட்சிகள் செய்கின்ற தவறான பிரசாரத்தை சிலர் நம்பிவிடுகிறார்கள்.<br />
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் உண்மைத் தன்மை என்னவென்று அவர்கள் புரியாமல் இருக்கிறார்கள்.<br />
<br />
வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் நடந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் சமமாகவே நடத்தப்பட்டார்கள்.<br />
<br />
அமைப்பு ரீதியில் அத்வானி தொடர்ந்து நீடிப்பாரா, இல்லையா என்று சிலர் தாங்களாகவே கேள்வியையும் எழுப்பி, பதிலையும் சொல்லிக் கொள்கிறார்கள். அத்வானி எந்தப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்தான் பாரதிய ஜனதாவின் வழிகாட்டி.<br />
<br />
பாரதிய ஜனதா ஆட்சி புரிகிற மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் மக்கள் நலத் திட்டங்கள் ஏராளமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.<br />
இதன் காரணமாக ஏனைய மாநிலங்களைவிட தனிமனித வருமானம் அம்மாநிலத்தில் கூடியிருக்கிறது. மத வேறுபாடு இல்லாமல் எல்லோரது பசியையும் போக்க வேண்டும்; எல்லோரையும் வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே பாரதிய ஜனதாவின் ஆட்சி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.<br />
<br />
பாரதிய ஜனதா மக்கள் முன்வைக்கும் வாதம் மதவாதம் அல்ல. அது தேசிய வாதம். சிலர் இதை வகுப்பு வாதம் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார்கள்.<br />
காலத்தோடு பொருந்த வேண்டும் என்பதற்காக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொண்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குக் கற்பித்திருக்கும் உண்மை. மாறாக, எந்த லட்சியத்துக்காக அரசியல் களத்திற்குள் நுழைந்தோமோ, அந்த லட்சியத்தில் இருந்து மாறாமல், அந்த லட்சியத்தை நோக்கி மக்களை ஈர்த்து, பாரத தேசத்தை உலக அரங்குக்கு இட்டுச் செல்வதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கை.<br />
பாரதிய ஜனதா கெட்டி தட்டிப் போய்விட்ட இயக்கம் அல்ல. மாறாக இந்த மண்ணில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் ஆல விருக்ஷம்.<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-1393710254297019332009-09-14T09:14:00.000-07:002009-09-14T09:14:00.303-07:00அரசு உருவாக்கும் புதிய இனம்சமஸ்<br />
<br />
உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெüரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தில் கல்வியாளர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை, அந்தச் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.<br />
<br />
<br />
இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ. 557.49 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏற்கெனவே, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 30 சத ஊதிய உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. <br />
<br />
தமிழக அரசு மட்டுமல்ல; மத்திய அரசும் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுமே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என்பது நியாயமானது மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.<br />
<br />
அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தவிர்த்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தி ஏன் உவப்பானதாக இல்லை என்பதை அரசு யோசிக்க வேண்டும். ஏனெனில், இதுவும் அரசின் கடமைதான்.<br />
<br />
நம் நாட்டின் ஆகப் பெரும்பான்மையினர் - அதாவது, 93 சதவீதத்தினர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில் இவர்களுடைய பணிப் பாதுகாப்புக்கு, பணி நலனுக்கு அரசு செய்தது என்ன என்று கேட்டால், சட்டப் புத்தகங்களிலுள்ள விதிகளைத் தவிர்த்து அரசால் உருப்படியான பதில்களைத் தர முடியாது.<br />
<br />
தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் கூலிப் பிரச்னையில் அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்சக் கூலியை ரூ. 150-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு என்ன செய்கிறது? இப்போதுதான் ரூ. 100-ஆக நிர்ணயிப்பது தொடர்பாகவே யோசிக்கத் தொடங்கியுள்ளது.<br />
<br />
சரி, நெசவாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட இப்போது இன்னும் மோசம். ஒரு நெசவாளி - குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நாள் முழுவதும் உழைத்தால்கூட மாதம் ரூ. 5,000 ஈட்டுவது கடினம். நெசவாளிகளுக்கு உதவும் "சிகிடா'க்கள் ரூ. 2,000 ஈட்டினால், அது அதிர்ஷ்டம்.<br />
<br />
இவர், அவர் என்றில்லாமல் நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இதுதான். இவர்களுடைய நலன்களில் அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறை என்ன?<br />
<br />
முன்னெப்போதுடனும் ஒப்பிட முடியாத இப்போதைய மோசமான சூழலையே எடுத்துக்கொள்வோம். விலைவாசி கடுமையான உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில்தான் இந்திய முதலாளிகள், உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு என்று "தீபாவளி' கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்ன?<br />
<br />
ஆக, அரசு என்ன நினைக்கிறது என்றால், அதிகாரத்தைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும் சக பங்காளிகளின் நலன் மட்டுமே தன்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறது. எஞ்சியோருக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 80 கூலி, 100 நாள் வேலை போதும் என்று நினைக்கிறது.<br />
<br />
இந்தப் போக்கு அநீதியானது மட்டுமல்ல; ஆபத்தானதுமாகும். அரசின் மனோபாவம் இந்தியாவில் அரசு ஊழியர்களை மட்டும் சகல கடவுளர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற்றி வருகிறது.<br />
<br />
சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக் கூடிய ஒரு புதிய இனமாக அரசு ஊழியர்களை மாற்றி வருகிறது.<br />
<br />
இந்த உண்மையை எல்லோரையும்விட சாமர்த்தியசாலிகள் - குறிப்பாக - அரசு ஊழியர்கள் சீக்கிரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள். ஓர் அரசு ஊழியர் அவர் ஆணோ, பெண்ணோ திருமண வயதில் இருந்தால், அவர் தேடும் இணையை அரசு ஊழியராகவே தேடுகிறார். அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தேடும் வரன்களும் அரசு ஊழியர்கள்தான்.<br />
<br />
இப்படியாக ஓர் இனம் உருவாகிறது; சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக்கூடிய ஒரு புதிய இனம். சமூகத்தின் ஏனைய தரப்பினர், அரசையும் அது உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய இனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7663428433722801267.post-7072277556223238802009-09-14T09:07:00.000-07:002009-09-14T09:07:47.340-07:00இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம்..உ . ரா. வரதராசன்<br />
<br />
இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.<br />
<br />
<br />
தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.<br />
<br />
சுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.<br />
<br />
வரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.<br />
<br />
இது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.<br />
<br />
இத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன்? சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.<br />
<br />
2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.<br />
<br />
சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள்! இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது!<br />
<br />
இப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.<br />
<br />
160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.<br />
<br />
2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.<br />
<br />
இந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.<br />
<br />
அமெரிக்கா, 34 நாடுகளைக் குறி வைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.<br />
<br />
அமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.<br />
<br />
இப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.<br />
<br />
சுவிஸ் நாட்டு அரசாங்கம் "இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.<br />
<br />
சுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் பெயர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.<br />
<br />
இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.<br />
<br />
ஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.<br />
<br />
இந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.<br />
<br />
மொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.<br />
<br />
நம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை. <br />
<br />
எனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே!<div class="blogger-post-footer"><script language='Javascript' src='http://www.jstracker.com/hits-http://kannimai.blogspot.com'></script>
<noscript><a href='http://www.jstracker.com/' target=_blank>Number of Visits</a></noscript></div>Rajahttp://www.blogger.com/profile/15469297241184332486noreply@blogger.com0